இன்று ஜூலை 1 முதல் பஸ் கட்டணங்களை 2.5% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எரிபொருள் விலை மீண்டும் உயர்ந்ததால் அந்த முடிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

தினசரி பேருந்துக்களை நம்பி வாழ்க்கையை நடத்தும் மக்களுக்கு இது இன்னும் ஒரு பின்னடைவாகும்.

ஒருபுறம் எண்ணெய் விலை உயர்வு… மறுபுறம் விலை கட்டணங்களை குறைக்கும் திட்டங்கள் ரத்து – இதுவே அரசின் பொறுப்பற்ற செயல்களை வெளிக்காட்டுகிறது.

மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டிய பொறுப்பில் உள்ளவர்களே, மக்களுக்கு கூடுதல் சுமைகளை ஏற்படுத்தும் நிலை வருந்தத்தக்கது.
ஐக்கிய காங்கிரஸ்

பொதுமக்கள் மீது நேரடி தாக்கம் ஏற்படுத்தும் இத்தகைய முடிவுகளை கண்டிக்கிறது.

எரிபொருள் விலை மேலாண்மை, போக்குவரத்து நிதி மறுசீரமைப்பு உள்ளிட்ட துறைகளில், நுட்பமான தீர்வுகள் தேவைப்படும் தருணம் இது.

மக்களின் நலனுக்காக தொடர்ந்தும் பேசுவோம். நீதியும் நியாயமும் நிலைநாட்டுவோம்!
சப்வான் சல்மான்
பொதுச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ்
Post a Comment