இது ஒரு தனிப்பட்ட சம்பவமா? அல்லது ஒரு திட்டமிட்ட வன்முறை ஊடாக ஆட்சியைப் பிடித்தவர்களின் இருண்ட பின்னணியோ?
அரகலய போராட்டத்தின் பின்னணியில் மக்கள் கோபம், பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் முறைகேடுகள் இருந்தன என்பது உண்மைதான். ஆனால் அந்த போராட்டங்கள் சில பகுதிகளில் கட்டுப்பாடற்ற வன்முறையிலும், சொத்துச் சேதத்திலும் முடிந்தன. இன்று சிலாபம் நீதவான் நீதிமன்றம், NPP எம்.பி. மீது குற்றச்சாட்டு தொடர்பாக கைது உத்தரவு பிறப்பித்துள்ள நிலைமை, அந்த வன்முறைகளின் தொடர்ச்சியாகவே பார்க்கப்படலாம்.
இன்று அரசியல் மாற்றம் என்பது மக்கள் விருப்பத்தின் வெளிப்பாடா, அல்லது திட்டமிட்ட ஒரு இயக்கத்தின் மூலமா என்பதைக் கேட்கும் நேரமிது.
இலங்கை மக்களின் போராட்டம், எதிர்ப்புகள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் உண்மைதான். ஆனால் அதன் பெயரால் கட்டுப்பாடற்ற செயல்கள் சட்டத்தின் எல்லையை மீறுகின்றபோது, அந்த மாற்றங்களும் கேள்விக்குறியாகின்றன.

Post a Comment